Pages

dimanche 22 septembre 2013

கருணைக்கிழங்கு மசியல்


கருணைக்கிழங்கு மசியல்
 
 





  • கருணைகிழங்கு - 1/4 கிலோ                                   
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • இரால் வரட்டியது - 10
  • சின்ன வெங்காயம் - 10 ( நறுக்கியதில் 2 தாளிப்புக்கு தனியாக எடுத்து வைக்கவும் )
  • மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - சிறிது
  • தேங்காய் விழுது- 1 மேசைக்கரண்டி
    • முதலில் கருணைகிழங்கை நன்கு அவித்து தோலை நீக்கி கையால் மசித்துக்கொள்ளவும்.
    • பின் கிழங்கில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும்.
    • பின் புளியை கெட்டியாக கரைத்து அதையும் கிழங்குடன் சேர்க்கவும்.பின்பு அதில் உப்பு, மசாலாதூள்,மஞ்சள்தூள்,ஆகியவற்றை சேர்த்து பிசைந்துவைக்கவும்.
    • பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம்
    • போட்டு பொரிந்ததும் பாதி எண்ணெய்யை கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
    • பின் மீதி உள்ள எண்ணெய்யில் கருவேப்பிலை, இராலையும் போட்டு வதக்கவும்.
    • பின் பிசைந்து வைத்த கிழங்கை சேர்த்து கிளறி தீயை லேசாக வைத்து கொதிக்க விடவும்.
    • நன்கு கொதித பிறகு தேங்காய் விழுதை சேர்த்து கிளறி சிறிது நேரம் தணலில் வைத்து கிண்ணத்தில் எடுத்து வைத்த எண்ணெய்யை ஊற்றி இறக்கவும்.

     

    Aucun commentaire:

    Enregistrer un commentaire