Pages

dimanche 4 décembre 2016

உடலில் சூடு அதிகரிக்கும்



சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா?

* தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல, ஸ்டிராய்டு ஊசி போட்டாலும் சூடு அதிகரிக்கும். அதைத்தான் காய்ச்சல் என்று சொல்லி மருந்து தரப்படுகிறது.

* மது குடிப்பவர்களுக்கு, அடிக்கடி சிகரெட் பிடிப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்.

* மாதவிடாய் மற்றும் மகப்பேறு சமயங்களில் சில பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

* தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் சூடு, உடலில் அதிகமாக இருக்கும்.

* நீண்ட தூர பயணங்களுக்கு பின், உடல் சூடு காணும்.
உடல் சூட்டை எப்படி சமாளிப்பது?

உடலில் உள்ள சீரற்ற தன்மையை சரி செய்ய ஒரே வழி உணவும், பழக்க வழக்கங்களும் தான். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் இருந்தால் பிரசச்னை ஏற்படும். அதுபோல, உணவுகளில் மாற்றம் இருந்தாலும் இதே தொல்லை தான். அதனால், இந்த இரண்டிலும் கவனம் தேவை. உடலில் சூடு தணிய வேண்டுமானால், உணவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போது “ஜங்க் புட்’ என்று சொல்லப்படும் கொழுப்பு உணவுகளால் கூட உடலில் மாற்றம் ஏற்படுகிறது.

அதனால் தான் இதை சாப்பிடுவோருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. என்ன உணவு சாப்பிட்டாலும், சத்தான, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பச்சைக் காய்கறி, சத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு எட்டிப்பார்க்கக்கூட செய்யாது. இதை வளர் இளம் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான உணவுகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என்று சேர்த்துக் கொள்வதுடன், இந்த உணவுகள் சேர்ப்பது மிக முக்கியம்.

* தர்பூசணி மட்டுமல்ல, கிர்ணி உட்பட பல வகை நீர்ச்சத்து உள்ள பழங்களில் பொட்டாசியம் சத்து உள்ளது. துண்டாக்கியோ, ஜூசாகவோ சாப்பிடலாம்.

* பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மக்னீசியம் சத்துள்ள பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணிவதுடன், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.

* கோடையில் மட்டுமல்ல, பொதுவான சமயங்களில் வெள்ளரியை துண்டாக்கி சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து உள்ளது.

* சிலருக்கு தயிர், மோர் சாப்பிடும் பழக்கமே இல்லை. இப்போது தான் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். தயிர் சாப்பிடுவது மிக நல்லது. சூடு தணிந்து, இதத்தை தரும் தயிர், கண்டிப்பாக சாப்பாட்டில் சேருங்கள்.

samedi 3 décembre 2016

வாழைப்பழம் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?



காரியத்துக்கான காரணமோ காரணத்துக்கான காரியமோ தெரிந்து கொண்டால் சிறப்பு

வாழைப்பழம்
தெய்வங்களுக்கு வாழைப்பழம்
படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும்
தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.

மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால்,
தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.

இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.
பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்!

தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.



நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தேங்காய்

தேங்காயில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெயைச் சமைக்கப் பழகாதவர்கள், தேங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். ஹார்மோன்கள் சீராகச் சுரக்க, தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் உதவும். தைராய்டு இயக்கத்தைச் சீர்படுத்தும். தேங்காயில் உள்ள ‘ட்ரைகிளிசரைட்ஸ்’ (Triglycerides) என்ற கொழுப்பு, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். வளர்சிதை மாற்றங்கள் சீராகும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைச் சமையலில் சேர்ப்பதே சிறந்தது. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொதிக்கவிட்டுத் தயாரிக்கப்படுவதால், தேவையான சத்துக்கள் இருக்காது. தேங்காய்ப்பால், தேங்காய் சட்னி, தேங்காய் எண்ணெய்… என தேங்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபைன்

அதிகமான கஃபைன் தூக்கத்தைக்கெடுக்கும். தூக்கமின்மையால் உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, தைராய்டு ஹார்மோனின் அளவு குறைகிறது. எனவே, காபிக்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு கப் என்ற அளவில் குடிக்கலாம்.

கேரட்

உடலில் அதிகமாக இயங்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவுவது கேரட். இருபாலினருக்கும் ஈஸ்ட்ரோஜனின் இயக்கம் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்துவது கடினம். கேரட்டில் உள்ள நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். இளசாக இருக்கும் கேரட்களை, பச்சையாகச் சாப்பிட ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கட்டுக்குள் வரும்.

துத்தநாகம்

‘டெஸ்டோஸ்டிரான்’ என்ற ஹார்மோன் சுரக்கவும் செல்கள் பிரிவதற்கும் துத்தநாகச் சத்து உதவுகிறது. இது ஆற்றல்மிக்க ஆன்டிஆக்ஸிடன்ட். புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. உடலில் போதுமான துத்தநாகச் சத்து இருந்தால், செல் சிதைவுகளும் ஏற்படாது. கடல் உணவுகள், இறைச்சி, நிலக்கடலை, சுண்டல், டார்க் சாக்லெட் போன்றவற்றில் துத்தநாகம் நிறைவாக உள்ளது.

நார்ச்சத்து

டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்களின் சமநிலைக்கும் நார்ச்சத்துக்கும் தொடர்பு உள்ளது. நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தவிர்ப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையைக் காக்கிறது. முழுத் தானியங்கள், பச்சை நிறக் காய்கறிகள், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், அத்தி ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் ஹார்மோன்களின் இயக்கத்துக்கு உதவும். ஹார்மோன் அனுப்பவேண்டிய தகவல்களை சரியான இடத்துக்குக் கொண்டுசெல்லும். உடலுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றம் சிறப்பாக நடந்தேறும். இதற்கு, வால்நட், முட்டை, மீன், ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவறைச் சாப்பிடலாம்.

மக்னீசியம்

உடலில் சில நூற்றுக்கும் மேற்பட்ட செயல்பாடுகள் நடப்பதற்கு மக்னீசியம் அவசியம். இது நீண்ட நேர ஆரோக்கியமான தூக்கத்தை அளிக்கும். உடலுக்கு சக்தி அளித்து, ஹார்மோன்களை இயக்கவைக்க உதவுகிறது. செரட்டோனின் இயக்கத்தைச் சீர்்படுத்தி, மகிழ்ச்சியாக இருக்க உதவும். கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், வாழை, உலர்பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே நல்ல உணர்வுகளைப் பெறலாம். வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சிகள் இதயம் தொடர்பானவை என்பதால், இதயம் பலப்படும். பயிற்சி செய்யும்போது, ரத்தத்தின் வழியே செல்லும் ஹார்மோன்களின் வேதித் தகவல்கள் மேம்படும். இதனால், மன அழுத்தம், சோர்வு போன்றவை சரியாகும். நீச்சல், நடை, ஜாகிங், சைக்கிளிங் போன்றவை கார்டியோ இயக்கங்களைச் சீராக்கும்.

மறுக்க முடியாத உண்மை.



கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!


சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “ஆயில்’.
இதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..
ஜான்சன்பேபி ஆயில் முதல்சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .
.johnson baby oil, amla hair oil,clinic plus, ervamartin hair oil, etc..பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?

1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இடைவிடாத இருமலுக்கு



இடைவிடாத இருமலுக்கு: அதிமதுரத்தை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

தாது விருத்திக்கு: உடல் வலிமைக்கும் தாது விருத்திக்கும் முருங்கைப்பூ நல்லது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன் பசும்பாலில் முருங்கைப்பூவைப் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைப்புண் ஆற: இலந்தை இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் உப்பு போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும்.

வயிற்றில் பூச்சி போக: மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி வெளியேறிவிடும்
.
குளவி கொட்டினால்: குளவி கொட்டினால் அந்த இடத்தில் ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் வீக்கம் வராது. வலியும் போய்விடும்.

சேற்றுப் புண் போக: இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது அந்த மாவை கொஞ்சம் எடுத்து அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து புண்ணில் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.

விக்கல் நிற்க: விடாமல் விக்கல் எடுக்கிறதா? கடுக்காய் தோலை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலக்கி சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

போதை தெளிய: அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு ஒரு டம்ளர் கொடுத்தால் போதும். விரைவில் போதை தெளியும்.

பல் வலி போக: பலி வலியை உடனடியாக போக்க ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருங்கள். வலி போனதும் பல் டாக்டரை பார்த்து நிரந்தர தீர்வு காணுங்கள்.

தூக்கம் வருவதற்கு: ஒரு வெங்காயத்தை எடுத்து கண்ணீல் சாற்றை பிழியுங்கள். கண்ணீர் வந்து அடங்கியதும் தூக்கம் தானாக வரும்.