Pages

samedi 6 janvier 2018

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…



உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும்.

2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது.

3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும்.

4. கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் நன்மையைவிட அதிகம் கெடுதல் தரக் கூடியவை.

5. வீட்டில் பழ சாறு செய்யும் போது வெள்ளைச் சர்க்கரை-க்குப் பதில் வெல்லம் அல்லது தேன் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளைச் சர்க்கரை நல்ல உயிர்ச் சத்துக்களைச் கொல்லும் தன்மையுடையது.

6. சமையலில் கூடியவரை அடுப்பை விட்டு இறக்கும் போது தேங்காய் சேர்க்க வேண்டும்.

7. காய்கறிகளை எண்ணெயில் பொரிப்பது மற்றும் வதக்குவதைவிட நீரில் அல்லது நீராவியில் வேக வைப்பது நலம்.

8. இரவில் கண்டிப்பாகத் தயிரும், கீரையும் சாப்பாட்டில் சேர்க்கக் கூடாது.

9. நறுக்கியவுடன் காய்கறிகளைச் சமைத்துவிட வேண்டும். அதேபோல பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.

பயனுள்ள குறிப்புகள்



பயனுள்ள குறிப்புகள் & சமையல் டிப்ஸ்...டிப்ஸ் டிப்ஸ்..!

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.

12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்

டிப்ஸ் டிப்ஸ்..

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

*ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*காய்கறிகள் வறுக்கும்போது, எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால்



பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

அதிரடி அறுபது! வீட்டுக் குறிப்புகள்



அதிரடி அறுபது! வீட்டுக் குறிப்புகள்

*என்னதான் கழுவினாலும் ஃபிளாஸ்க்கில் ஒருமாதிரி மக்கிப்போன வாசனை வந்துக்கொண்டே இருக்கும். வினிகர் போட்டு கழுவினால் இந்த வாசனையை துரத்தலாம்.
*மழைக்காலத்தில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்துப் போய் அவசரத்துக்கு பற்றவே பற்றாது. தீப்பெட்டியினுள் பத்து, பதினைந்து அரிசியை போட்டு, பெட்டியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடிவைத்துவிட்டால் எப்போது பற்றவைத்தாலும் ஒரே முயற்சியில் பற்றிக் கொள்ளும்.
*பீங்கான் கப்பில் காபி மற்றும் டீக்கறை அடிக்கடி படிந்துவிடும். வெங்காயத்தை வெட்டி இந்த கறையில் தேய்த்தால் பீங்கான் பளிச்.
*வாங்கி வைத்த பால் பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் வைக்க முடியவில்லை.
கரெண்ட் கட். அவசரத்துக்கு காய்ச்சவும் நேரமில்லை. பதட்டப்படாதீர்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பால் பாக்கெட்டை போட்டு வைத்துவிட்டால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சிக் கொள்ளலாம்.
*வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையா? கவலை வேண்டாம். இட்லிதோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பாவிலோ பக்கெட்டிலோ போட்டு மூடிவைத்துவிட்டால் புளிக்கவே புளிக்காது.
*வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில் ஒருமாதிரி வாசனை தேங்கிவிடும். இந்த வாடையை போக்க நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கலாம்.
*கிச்சனில் இருக்கும் பாத்திரம் கழுவும் தொட்டியை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் அழுக்கு முழுமையாக போகாது. கழுவுவதற்கு முன்பாக பழைய செய்தித்தாள்களை கொண்டு தேய்த்துவிட்டு கழுவினால் பலன் பளிச்சென்று இருக்கும்.
*காய்கறிகள் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காதீர்கள். அந்த நீரை நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றினால் ஊட்டமாக வளரும்.
*கேஸ் ஸ்டவ்வை எவ்வளவு துடைத்தாலும் திருப்தி தருமளவுக்கு க்ளீன் ஆகாது. தேங்காய் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து அதில் துணியை நனைத்து துடைத்துப் பாருங்கள். திருப்திகரமாக பளீரிடும்.
* மீன் சமைத்து சாப்பிட்ட பின்னும் சமைத்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் வாடை தூக்கும். கொஞ்சம் சீயக்காய் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை
துலக்கினால் வாசனை போயே போச்சு!
* மீனை சுத்தம் செய்து பல மணி நேரங்கள் கழித்தும் கையில் அந்த வாசம் அடித்துக் கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம். மீனை கையில் எடுப்பதற்கு முன்பாக சில சொட்டு சமையல் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு தேய்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தொல்லையே இல்லை.
*வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க பாட்டி காலத்து டெக்னிக். வாங்கிய காற்கறிகள் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும். துணி காய காய அவ்வப்போது ஈரமாக்கி வைத்துக் கொள்வது உங்கள் சமர்த்து.
*பால் குக்கரின் அடியில் ஒட்டிக்கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்சினையே வராது.
*கேஸ் ஆண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? குற்றம் சிலிண்டரில் அல்ல. கீரையை தவிர எதை சமைத்தாலும் பாத்திரத்தை மூடியே வைத்திருங்கள். எரிபொருள் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் கணிசமாக மிச்சமாகும்.
*வெயில் காலத்தில் வாங்கி வைத்த கறிவேப்பிலை வாடி அடிக்கடி 'கரு'வேப்பிலை ஆகிவிடும். அலுமினியப் பாத்திரத்தில் இலையை போட்டு மூடி வைத்துவிட்டால் இந்தத் தொல்லையை தவிர்த்து விடலாம்.
* கடலை எண்ணெய் கெட்டுப் போய்விடுகிறது என்று கடைக்காரரிடம் சண்டைக்கு போகாதீர்கள். அதில் சிறிதளவு புளியை போட்டு வையுங்கள். எண்ணெய் அப்படியே புதுசாக இருக்கும்.
* கறிவேப்பிலையையும், கொத்துமல்லியையும் வதக்கி சமைக்காதீர்கள். அப்படியே பச்சையாக உணவில் சேர்த்தால் பார்ப்பதற்கும்
பக்காவாக இருக்கும். ஊட்டச்சத்துகளும் அதில் அப்படியே தங்கும்.
*கேரட்டு கசக்கிறதா? தப்பு உங்களுடையதுதான். ஃப்ரிட்ஜில் கேரட்டையும், ஆப்பிளையும் அருகருகே வைத்திருந்திருப்பீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவிதமான வாயு கேரட்டை கசக்கச் செய்துவிடும் பண்பு
கொண்டது. ஆப்பிள் அல்லது கேரட்... இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே உங்கள் ஃப்ரிட்ஜில் இடஒதுக்கீடு கொடுங்கள்.
*சர்க்கரை டின்னில் எறும்புத் தொல்லை என்பது காலம் காலமாக தொடரும் தொந்தரவு. சர்க்கரை டின்னில் நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. டின்னை திறந்ததுமே கும்மென்ற வாசனை உங்களுக்கு போனஸ்.
*சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி அடிக்கடி கூர் மழுங்கி மொக்கை ஆகிவிடுகிறதா? கவலை வேண்டாம். பயன்படுத்திய பிறகு துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
*டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
*மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் கடாயை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப்
பொரியும்.
*தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
*வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால் தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
*தோசைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
*மைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
*ட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் ஜாம் நீண்ட
நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
*காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
*குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.
*நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கிவிடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத்
தேய்க்கலாம்.
*வாழைத் தண்டுகள், கீரைத் தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
*பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
*வீட்டிலேயே கேக் செய்யும் போது, பேக்கிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
*தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
*இனிப்புகள் தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
*வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
*ஊறுகாய் தயாரிக்கும் போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது. மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
*கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
*வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில்
கண்ணீர் வராது.
*பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு அவற்றை போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும். முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
*இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
*காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு
ருசி கெடாமல் இருக்கும்.
*தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட
சமைக்கலாம்.
*முட்டைக்கோசை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
*உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
*தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைகாய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
*வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து
விடும். ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும்.
வாய் மணக்கும்.
*இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும்.
*மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக்கூடியது. பட்டுப் புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒரு முறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ஏக்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
*வெப்பத்தால் வரும் வயிற்றுவலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது. வேர்க் கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
*மண்பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது. மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்து மிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப் பழக்கத்தைக் கைவிடவேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்.
*காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்
படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா காதைக் குடையக் கூடாது.
*கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் முக அழகிற்கு ஆரோக்கியமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது. தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து , சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.
* இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய்யுடன் அரை மூடி அளவு எழுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும். கடலை எண்ணெய்யை உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பாதாம் எண்ணெய்யை விட மிகுந்த சத்துக்கள் உடையது. உணவுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். உஷ்ணத்தை தருவதுடன் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும். கடலை எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது.
*தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், மிளகுப்பொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு வராது. எள்ளில் இருந்து கிடைக்க கூடியது நல்லெண்ணெய். இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் பொடுகு இல்லாமல் போகும். கொழுப்பு சத்து நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்கக் கூடியது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.
*நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பற்கள் ஆரோக்கியம் பெறும். கன்னம் பலம் அடையும். முக வசீகரம் ஏற்படும். நல்லெண்ணெய் உணவுக்கு பயன்படுவதோடு, சனிக்கிழமைதோறும் உடலுக்கு தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியம் பெறும். தோல்நோய்கள் இல்லாமல் போகும்.
*தேங்காய் எண்ணெய்யுடன், கருவேப்பிலையை நீர்விடாமல் பொடித்து சேர்க்கவும். தைலப்
பதத்தில் காய்ச்சி தலைக்கு தடவுவதால் முடி கருப்பாகிறது. பொடுகு இல்லாமல்
போகிறது. இளநரை தடுக்கப்படுகிறது. தலைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. தலைமுடி நன்றாக வளரும்.