Pages

vendredi 1 février 2013

செட்டிநாடு தக்காளி குழம்பு



Photo
  • 1. தக்காளி - 5                                                                 
  • 2. பச்சை மிளகாய் - 4
  • 3. வெங்காயம் - 2
  • 4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  • 6. வெல்லம் - 1 தேக்கரண்டி
  • 7. புளி கரைசல் - 1 கப்
  • 8. கறிவெப்பிலை
  • அரைக்க: (1)
  • 1. மிளகாய் வற்றல் - 5
  • 2. இஞ்சி - 1/4 இன்ச்
  • 3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • 4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  • அரைக்க: (2)
  • 1. தேங்காய் துருவல் - 1/4 கப்
  • 2. கசகசா - 2 தேக்கரண்டி
    • வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.
    • தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.
    • பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.
    • அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.
    • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    • வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
    • இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.
    • புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.
    • இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.

    Note:

    இதில் புளி கரைசலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கு சேர்த்தும் சமைக்கலாம். குளிருக்கு இதமாக காரசாரமாக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

    Aucun commentaire:

    Enregistrer un commentaire