Pages

vendredi 27 avril 2012

உருளை காரகுழம்பு

  • உருளைகிழங்கு -2
  • கொத்தமல்லிதழை-சிறிது
  • புளி -சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • வறுத்து அரைக்க:
  • சின்னவெங்காயம் -10
  • தனியா -2ஸ்பூன்
  • சீரகம் -1/2ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -2
  • பூண்டு -5பல்
  • எண்ணை -1ஸ்பூன்
  • தக்காளி -1
  • தேங்காய்துறுவல் -3ஸ்பூன்
  • தாளிக்க:
  • எண்ணை -2ஸ்பூன்
  • கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்
  • வெந்தயம் -1/4ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது
  • வெங்காயம் -1(நறுக்கவும்)
  • பச்சைமிளகாய் -1(நறுக்கவும்)
    • உருளைகிழங்கை வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
    • வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.
    • புளியை கரைத்துவைக்கவும்.
    • குழம்புவைக்கும் பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    • குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.

    பனீர் பட்டாணி குருமா

  • பனீர் துண்டங்கள் - ஒன்றரைக் கப்
  • புளிக்காத தயிர் - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சைப் பட்டாணி - அரை கப்
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பிரியாணி இலை - 2
  • கிராம்பு - 2
  • பட்டை - ஒரு சிறியத்துண்டு
  • பூண்டு - 2 பல்
  • மிளகாய்பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி
  • தனியாப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
  • தக்காளி விழுது - கால் கப்
  • உப்பு - தேவையான அளவு
    • பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
    • பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
    • பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    • பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
    • இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
    • சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
    • நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.

    lundi 23 avril 2012

    வெங்காய வடகம்

  • சின்ன வெங்காயம்(உரித்தது) - 8 கப்
  • வெள்ளை உளுத்தம்பருப்பு - 1.5 கப்
  • கடுகு - 1/2 கப்
  • சீரகம் - 1/2 கப்
  • பூண்டு(உரித்தது) - 1/2 கப்
  • பெருங்காயப் பவுடர் - 1.5 டீஸ்பூன்
  • வெந்தயம்(முதல் நாள் இரவே ஊற வைக்கவும்) - 1/4 கப்
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
    • உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
    • சின்ன வெங்காயத்தை, உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • சீரகம், பூண்டு இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பருப்பு அரைபட்டால் போதும். இட்லிக்கு அரைப்பது போல அரைக்க வேண்டாம்.
    • ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பருப்பு, சீரகம் பூண்டு விழுது, அரைத்த வெந்தயம், உருவிய கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
    • ஒரு ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, வெயிலில் நன்றாகக் காய விடவும்.
    • ஈரப் பதம் இல்லாமல் 2-3 நாட்கள் காய்ந்ததும், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
    • தேவைப்படும்போது, காய்ந்த எண்ணெயில் இந்த வடகங்களைப் போட்டு, பொரித்துக் கொள்ளலாம்.

     

    வடகம் உருட்டிக் காய வைக்கும்போது, கிள்ளினாற்போல வைக்கவும். ரொம்பவும் உருட்டி, இறுக்கமான உருண்டைகளாக வைத்தால், மேற்புறம் காய்ந்தாலும், உள்ளே ஈரப் பதம் இருக்கும். அப்படி இருந்தால், ஒரு வருடத்துக்கு வைத்திருக்கும்போது, வண்டு வர வாய்ப்பு உண்டு. நன்றாகக் காய வைத்து எடுத்தால், ஒரு வருடம் வரை கெடாது.இந்த வடகத்தைப் பொரித்து, புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, கூட்டாஞ்சோறு இவற்றில் சேர்க்கலாம். சுவை கூடும்.

    dimanche 15 avril 2012

    சுக்கா சிக்கன்

     

    சுக்கா சிக்கன்

    தேவை:

    கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)
    பெரிய வெங்காயம் – 3
    இஞ்சி – 1 துண்டு
    பச்சை மிளகாய் – 2
    பூண்டு – 1
    மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
    தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்
    சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
    கறிமசால்தூள் – 1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை – 1 கப்
    எண்ணெய் – 2 கப்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:
    கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    mercredi 11 avril 2012

    ஆட்டுக் குடல் குழம்பு

    ஆட்டுக் குடல் குழம்பு

        
    தேவை:                                                                                           
    ஆட்டுக்குடல் – 1
    மல்லி – 2 தேக்கரண்டி
    வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
    உப்பு – தேவையான அளவு
    மிளகாய் வற்றல் – 6
    சீரகம் – 3 தேக்கரண்டி
    இஞ்சி – 1 சிறு துண்டு
    நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி



    செய்முறை:
    மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.