Pages

vendredi 27 avril 2012

பனீர் பட்டாணி குருமா

  • பனீர் துண்டங்கள் - ஒன்றரைக் கப்
  • புளிக்காத தயிர் - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சைப் பட்டாணி - அரை கப்
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பிரியாணி இலை - 2
  • கிராம்பு - 2
  • பட்டை - ஒரு சிறியத்துண்டு
  • பூண்டு - 2 பல்
  • மிளகாய்பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி
  • தனியாப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
  • தக்காளி விழுது - கால் கப்
  • உப்பு - தேவையான அளவு
    • பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
    • பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
    • பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    • பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
    • இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
    • சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
    • நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.

    Aucun commentaire:

    Enregistrer un commentaire