Pages

lundi 23 avril 2012

வெங்காய வடகம்

  • சின்ன வெங்காயம்(உரித்தது) - 8 கப்
  • வெள்ளை உளுத்தம்பருப்பு - 1.5 கப்
  • கடுகு - 1/2 கப்
  • சீரகம் - 1/2 கப்
  • பூண்டு(உரித்தது) - 1/2 கப்
  • பெருங்காயப் பவுடர் - 1.5 டீஸ்பூன்
  • வெந்தயம்(முதல் நாள் இரவே ஊற வைக்கவும்) - 1/4 கப்
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
    • உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
    • சின்ன வெங்காயத்தை, உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • சீரகம், பூண்டு இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பருப்பு அரைபட்டால் போதும். இட்லிக்கு அரைப்பது போல அரைக்க வேண்டாம்.
    • ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பருப்பு, சீரகம் பூண்டு விழுது, அரைத்த வெந்தயம், உருவிய கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
    • ஒரு ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, வெயிலில் நன்றாகக் காய விடவும்.
    • ஈரப் பதம் இல்லாமல் 2-3 நாட்கள் காய்ந்ததும், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
    • தேவைப்படும்போது, காய்ந்த எண்ணெயில் இந்த வடகங்களைப் போட்டு, பொரித்துக் கொள்ளலாம்.

     

    வடகம் உருட்டிக் காய வைக்கும்போது, கிள்ளினாற்போல வைக்கவும். ரொம்பவும் உருட்டி, இறுக்கமான உருண்டைகளாக வைத்தால், மேற்புறம் காய்ந்தாலும், உள்ளே ஈரப் பதம் இருக்கும். அப்படி இருந்தால், ஒரு வருடத்துக்கு வைத்திருக்கும்போது, வண்டு வர வாய்ப்பு உண்டு. நன்றாகக் காய வைத்து எடுத்தால், ஒரு வருடம் வரை கெடாது.இந்த வடகத்தைப் பொரித்து, புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, கூட்டாஞ்சோறு இவற்றில் சேர்க்கலாம். சுவை கூடும்.

    Aucun commentaire:

    Enregistrer un commentaire