Pages

mardi 11 décembre 2012

கறிக் குழம்பு

 


தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
 (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 5 பொடியாக வெட்டவும்   
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தாளிப்பதற்கு தேவையானது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கருவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் – கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire