- கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
- முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போடவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
- கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.
- கோழிக்கறி முழுவதும் வெந்த பின் அரைத்த முந்திரி சேர்த்து கலக்கி உடனே இறக்கவும்.
- அதன் மீது வறுத்த முந்திரி தூவி சூடாக பரிமாறவும். சுவையான ஒயிட் சிக்கன் குருமா தயார்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
jeudi 5 juillet 2012
கோழிக்கறி வெள்ளை குருமா
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire