Pages

mercredi 11 juillet 2012

முருங்கைப்பூ கூட்டு



முருங்கைப்பூ - 2 கைப்பிடி
  • 2. கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
  • 3. பயத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • 4. இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • 5. வெங்காயம் - 1
  • 6. தக்காளி - 1
  • 7. பச்சை மிளகாய் - 2
  • 8. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  • 9. மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
  • 10. தனியாதூள் - 1 தேக்கரண்டி
  • 11. உப்பு - தேவைக்கு
  • 12. தேங்காய் விழுது - 2 அ 3 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • 1. பட்டை - ஒரு சிறு துண்டு
  • 2. லவங்கம் - 2 அ 3
  • 3. சோம்பு - 1/4 தேகரண்டி
  • 4. கறிவேப்பிலை - சிறிது
  • 5. எண்ணெய் - தேவைக்கு
    • முருங்கைப்பூவை அலசி,சுத்தப் படுத்திக் கொள்ளவும்.கடலைப்பருப்பு மற்றும் பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில், எண்ணெய் ஊற்றி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
    • பின்,தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.இதனுடன் முருங்கைப்பூ சேர்த்து,மஞ்சள்தூள், மிளகாய்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
    • முருங்கைப்பூ வெந்ததும்,அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.பின், தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்த்ததும்,இறக்கி விடவும்.
    • சுவையான முருங்கைப்பூ கூட்டு தயார். இது தோசை,சப்பாத்தி,சாதத்துடன் நன்றாக இருக்கும்.

    Note:

    முருங்கையின் அனைத்து பாகங்களும்(முருங்கைக்காய், முருங்கைகீரை,முருங்கைப்பூ) சத்து நிறைந்தவை. முருங்கைப் பூவை யாரும் அவ்வளவாக உபயோகிப்பது இல்லை. இம்முறையில் கூட்டு செய்தால், சுவையாகவும் இருக்கும். அதன் சத்தும் கிடைக்கும்.

    Aucun commentaire:

    Enregistrer un commentaire