- தக்காளி - 2
- கருணைக்கிழங்கு - 3
- பெரிய வெங்காயம் - 1
- மிளகாய்ப் பொடி - 1 - 1.5 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- கருவேப்பிலை, பச்சை கொத்துமல்லி - 1 கைப்பிடி அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- நல்லெண்ணெய்/ரீஃபைண்ட் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
- தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- கருணைக்கிழங்கை, குக்கரில் குழைவாக வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
- வெந்த கிழங்கை, தோல் உரித்து, மசித்து வைக்கவும்.
- தக்காளியை சிறு துண்டுகளாக்கி, இஞ்சி, கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து,1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
- இதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, வதக்கவும்.
- வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, பெருங்காயப் பவுடர் சேர்த்து, 1 நிமிடத்துக்குக் கிளறவும்.
- பின் அரைத்த தக்காளி விழுதை, இதில் ஊற்றி, மிதமான தீயில், 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு மசித்த கருணைக்கிழங்கையும் உப்பையும் இதில் சேர்த்து, தீயைக் குறைவாக வைத்து, நன்றாகக் கிளறவும்.
- மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை, கொஞ்சம் கொஞ்சமாக, சேர்த்துக் கிளறவும்.
- சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார்.
- ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire