தேவையானவை:
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பீன்ஸ் – 6
காரட் – 1
பச்சைபட்டாணி – 1 கப் பிடிஅளவு
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
மயோனைஸ் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
பொட்டுக்கடலை பவுடர் – 1/4 கப்
பச்சைமிளகாய்விழுது – 1 டீஸ்பூன்
டால்டா – தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
காரட், பீன்ஸை மிகப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேக வைக்கவும். மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
நீர்க்க இருந்தால் இன்னும் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் ஓரிரு டீஸ்பூன் நீர் சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இதனை ஒரு ஆரஞ்ச் பழ அளவு எடுத்து வட்டமாக தட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் டால்டா விட்டு மிதமான தீயில் முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
இதே போல் மீதமுள்ள விழுதில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
நான்காக அல்லது ஆறாக கட் செய்து ஆனியன் ரிங்க், வட்டமாக நறுக்கிய கேரட், வெள்ளரி தூவி அலங்கரிக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire