கத்தரிக்காய் - 1/4 கிலோ
- கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும். வெங்காய, பூண்டு நறுக்கி வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
- முந்திரியை ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- புளியை 1/2 கப் நீர் விட்டு கரைத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- இதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
- பின் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் முந்திரி கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire