Pages

jeudi 1 mars 2012

ஆட்டு நுரையீரல் கூட்டு



தேவை:
ஆட்டு நுரையீரல் – 1
கடலை பருப்பு – 150 கிராம்
மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் – 1/4 முடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire