Pages

jeudi 1 novembre 2012

பொரி விளங்கா






நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க… இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்… இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது.. உடலுக்கு சத்தான, மிகவும் ருசியான இதை வீட்லயே ரொம்ப சுலபமாக செய்யலாம்… செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க…….
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி – 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு – 1/4 படி
தேங்காய் – 1 துருவியது
வெல்லப்பாகு தயாரிக்க:
வெல்லம் – 1 கிலோ
சுக்கு – ஒரு துண்டு
ஏலக்காய் – 4
செய்முறை:
வெல்லத்தை கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.
சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.

 


பூரி + உருளை கிழங்கு குருமா






தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு -சிறிதளவு
சீரக பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்.. (பொரிப்பதற்கு.)
வெதுவெதுப்பான நீர் – மாவு பிசைவதற்கு.
செய்முறை:
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும். பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் படுமாறு தடவவும்.ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும். எண்ணையை வாணலில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போன்று வட்டவடிவு வருமாறு…தேய்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள வட்ட வடிவான மாவு உருண்டைகளை.. போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும். ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்..இரு பக்கங்களும் சிவந்ததும் அதை எடுக்கவும்… சுவையான பூரி தயார்.இப்படி ஒவ்வென்றாக …தேவையான அளவிற்கு சுட்டு வைத்து கொள்ளவும்..பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
+
உருளை கிழங்கு குருமா..
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய்- 8
தக்காளி – 2
பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
கருவேப்பிலை- கொஞ்சம்
எண்ணை – சிறிதளவு
செய்யும் முறை:
முதலில் உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு உரித்தது ஆகியவற்றை பச்சை மிளகாய் நைசாக நறுக்கிவைத்து கொள்ளவும் ..வாணலில் சிறிது எண்ணையை விட்டு காய்ந்தாவுடன் கடுகு உளூந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள் இவற்றை போட்டு வதக்கவும் .. நன்றாக வதங்கியவுடன் .. உரித்த உருளையை கையால் பிசைந்தவாறே வாணலில் போடவும். பிறகு சிறிது நீர் விட்டு கொதிக்கவிடவும் … அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. பததிற்கு வந்த வுடன் இறக்கவும்..
சுவையான பூரி + உருளை கிழங்கு குருமா தயார்..

காலை உணவு




காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உலகத்தில், பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
சுறுசுறுப்பாக இருக்க
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
எலும்புகள் ஆரோக்கியம்
 
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
நினைவுத்திறன் அதிகரிக்கும்
காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும்.குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்கும்
சில குழந்தைகள் நொறுக்கு தீனியாக சாப்பிட்டு உடல் குண்டாக இருப்பார்கள். அவர்கள் உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர். சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சரிவிகித உணவு தேவை
காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.
எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

 





வட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு?




தேவையானவை:
சர்க்கரை – 250 கிராம்
தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப்
முட்டை – 5
ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி
கஜூ – 30 கிராம்
பிளம்ஸ் – 30 கிராம்
ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்)
மாஜரின் – ஒரு தேக்கரண்டி
 
செய்முறை:
தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.
எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).
அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.
அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.
குறிப்பு:
சர்க்கரைக்கு பதிலாக கித்தூள் பாவிக்கலாம். ஏலக்காய்த்தூளுக்கு பதிலாக வெனிலா பாவிக்கலாம்.
மாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம். தேங்காய் பாலுக்கு தடிப்புகூடிய முதல்பாலை விடவும்.
எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரையை கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.